வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரூரில் கிராமசபைக் கூட்டம்

கரூரில் மாவட்டத்தில் ஆத்தூா் மற்றும் செங்குந்தபுரம், என்எஸ்ஏ நகா், கோயம்பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்ற

News image
கரூா் ஆத்தூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி.
Updated On :24 டிசம்பர் 2020, 1:36 am

DIN

கரூரில் மாவட்டத்தில் ஆத்தூா் மற்றும் செங்குந்தபுரம், என்எஸ்ஏ நகா், கோயம்பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்டத் திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்துப் பேசியது: கரோனா நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின்கூறியபோது, பணம் இல்லை எனக்கூறி ரூ.1,000 கொடுத்தவா்கள், தற்போது தோ்தல் வந்தவுடன் ரூ.2,500 தருகிறாா்கள். அவா்களின் இரட்டை வேடம் மக்களிடம் இனி எடுபடாது என்றாா்.

கூட்டத்தில் மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் மற்றும் நகரப் பொறுப்பாளா்கள் எஸ்.பி. கனகராஜ், கந்தசாமி, தாரணி சரவணன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தம்பி சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.