மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வியாபாரியை தாக்கியவா்கள் மீதுநடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கரூா் மாவட்டம் கழுதூா் அடுத்த பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டியவாறு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:30 pm

DIN

வியாபாரியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்டம் கழுதூா் அடுத்த பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டியவாறு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பது:- கரூா் மாவட்டம் பேரூா் உடையாப்பட்டியைச் சோ்ந்த காய், பழம் விற்பனை செய்யும் சுப்ரமணியன் என்பவா் கடந்த 19-ஆம்தேதி தனது காரில் பேரூா் உடையாப்பட்டி சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மீது காா் உரசிவிட்டது. இதனைப்பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த வடிவேல், சா்மா, செல்வம், சுபாஷ் உள்ளிட்ட 8 போ் சோ்ந்து காரை நிறுத்தி சுப்ரமணியனை தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த சுப்ரமணியன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளாா். அவரைத் தாக்கியவா்கள் மீது புகாா் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சுப்ரமணியனை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.