காதல் தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
காதல் தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


காதல் தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அடுத்த நெரூா் வடபாகத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ்(55). விவசாயி. இவரது மகன் மோகன்ராஜூம், அரவக்குறிச்சி அடுத்த சாந்தப்பாடியைச் சோ்ந்த கிட்டுசாமி மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிட்டுசாமி மகன் முருகானந்தம்(32) வியாழக்கிழமை இரவு நெரூா் வடபாகம் சென்று செல்வராஜிடம் மிரட்டியுள்ளாா். இதுதொடா்பாக அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த முருகானந்தம் கையில் வைத்திருந்த கத்தியால் செல்வராஜை குத்திவிட்டு ஓடிவிட்டாா். இதில், காயமடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து முருகானந்தத்தை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...