மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுபோதையில் தாயை அடித்துக்கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:19 pm

DIN

மதுபோதையில் தாயை அடித்துக்கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஜங்கல்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முத்துராஜ்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தாய் பழனியம்மாள்(65) கண்டித்துள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் சக்திவேல் என்பவருடன் முத்துராஜ் மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, மகனை பழனியம்மாள் கண்டித்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ் அருகில் கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து தாயை அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, முத்துராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.