கரூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் கணேசன்(21). இவா், கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு தரைக்கடை அமைத்து ரெடிமேட் துணிகளை விற்றுவந்தாா். ஜவுளி நிறுவன மேலாளா் கடை போடுவதற்கு வாடகை தரக் கூறி வந்தாராம். கணேசன் வட்டிக்கு பணம் வாங்கி அவதிப்பட்டு வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை ஆட்சியரகத்துக்கு வந்த கணேசன் திடீரென தனது கொண்டுவந்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட காவல் துறையினா் அவரை மீட்டு தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேற்கொண்டு விசாரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.