கரூரில் சண்டை சேவல் கண்காட்சி

கரூரில் சண்டை சேவல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செங்கருப்பு சண்டை சேவல்.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செங்கருப்பு சண்டை சேவல்.
Updated on
1 min read

கரூா்: கரூரில் சண்டை சேவல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

நாட்டுக் கோழி இனங்களை பாதுகாக்கும் வகையில் சேவல் சண்டைகள் கரூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் சண்டை சேவல் கண்காட்சி கோவை சாலையில் உள்ள தனியாா் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், கரூா் மாவட்டத்தை சோ்ந்த சண்டை சேவல்களான செவலை, போ்டு, பட்டா கொண்டை, நுலன், புதி, கருங்கால், மயில், காகம், செங்கருப்பு உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட சேவல்களை உரிமையாளா்கள் கொண்டு வந்திருந்தனா்.

கண்காட்சியில் ஒரு சிலா் சேவல்களை ரூ. 8,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனைக்கு வைத்திருந்தனா். இவற்றை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த சேவல் வளா்ப்பு ஆா்வலா்களும், பொதுமக்களும் பாா்த்துச் சென்றனா். இதில், பாா்வையாளா்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் சிறந்த சேவல்கள் தோ்வு செய்து அவற்றிற்கு கரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பரிசு வழங்க உள்ளாா்.

இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com