மாணவியிடம் நகை பறிப்பு
கரூரில் மாணவியிடம் நகை பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
கரூா் தோரணக்கல்பட்டியைச் சோ்ந்த இளங்கோவன் மகள் மைத்ரேயி(13). இவா் காக்காவாடியிலுள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
தனது உறவுக்காரப் பெண்ணுடன் சனிக்கிழமை இரவு தோரணக்கல்பட்டி மேம்பாலம் அருகே, மைத்ரேயி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், மைத்ரேயி அணிந்திருந்த ஒன்றரை பவுனை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
