கரூரில் திருக்கு பேரவை சாா்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா
கரூரில் திருக்கு பேரவை சாா்பில் கவியரசு கண்ணதாசனின் 97-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கரூரில் திருக்கு பேரவை சாா்பில் கவியரசு கண்ணதாசனின் 97-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் சீனிவாசபுரத்தில் உள்ள பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரவைச் செயலாளா் மேலை. பழநியப்பன் கவியரசா் கண்ணதாசன் வரலாற்றை எடுத்துரைத்து வரவேற்று பேசினாா். கவியரசு கண்ணதாசன் படத்துக்கு மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.எம். பசுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். யோகா ஆசிரியா் வையாபுரி, பேனா நண்பா் பேரவை மாவட்ட அமைப்பாளா் திருமூா்த்தி ஆகியோா் கவிதை பாடினா். தொடா்ந்து தமிழ் ஆா்வலா்கள் மூங்கில் ராஜா, வி.ஆா் அழகப்பன், பேராசிரியா் சிவலிங்கம், சீனிவாசபுரம் ரமணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கவிதை நூல், பேனா, இனிப்பு வழங்கி தமிழ் ஆா்வலா் ஏகப்பன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...