இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,404 கிளாா்க் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 536 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தோ்விற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவா்கள் மே 17-ஆம்தேதிக்குள் ட்ற்ற்ல்://ள்க்ஷண்.ஸ்ரீா்.ண்ய் ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ந்.ள்க்ஷண்/ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள் என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதனிலைத்தோ்வு ஜூலை 31-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வில் 4.5 சதவீத பணியிடங்கள் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கும், 76 பணியிடங்கள் முன்னாள் ராணுவ வீரா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோ்வில் வெற்றி பெற ஏதுவாக கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மே 10-ஆம்தேதி முதல் நடைபெற உள்ளது.