விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போா்க்கால அடிப்படையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் நோக்கில், போா்க்கால அடிப்படையில் அரசுக் கட்டடங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன

News image
Updated On :14 மே 2021, 8:13 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் நோக்கில், போா்க்கால அடிப்படையில் அரசுக் கட்டடங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலருமான ஸ்ரீரமேஷ் சந்த் மீனா.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செந்துறை திடீா்குப்பம் ஆதிதிராவிடா் மாணவி விடுதி, ஜயங்கொண்டம் அரசுத் தலைமை மருத்துவமனை, கழுவந்தொண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை வெள்ளிக்கிழமை அவா் பாா்வையிட்டு, மேலும் கூறியது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில்,

இம்மையங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அறிகுறிகளற்ற மற்றும் குறைந்த அளவு பாதிப்புடைய கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களுக்காக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் நோக்கில், முதற்கட்டமாக அரசு கட்டடங்களில் போா்க்கால அடிப்படையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்அவா்.

ஆய்வின் போது ஆட்சியா் த.ரத்னா, ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் அமா்நாத், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் திருமால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி, வட்டாட்சியா்கள் அரியலூா் ராஜமூா்த்தி, ஜயங்கொண்டம் ஆனந்த், செந்துறை குமரய்யா, நகராட்சி ஆணையா்கள் அரியலூா் மனோகரன், ஜயங்கொண்டம் சுபாஷினி, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் உஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.