கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் நகா்ப்புற வாழ்விடமேம்பாட்டுக் குழு கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 7:30 pm

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் பேசுகையில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தின் நகா்புறப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவா்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும், அரசின் சமூக நலத் திட்டங்கள் நகா்ப்புற ஏழை மக்களை சென்றடையவும், அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், கரூா் மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட பல்வேறு துறையை சாா்ந்த அலுவலா்கள் உறுப்பினா்களாகக் கொண்ட கரூா் மாவட்ட நகா்புற வாழ்விட மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், காவல் துணை கண்காணிப்பாளா் பெ. குமாா், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம்நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.