கரூா் : கரூா் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு பெத்தாச்சி செட்டியாா் பெயா் வைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பேரவையின் செயலா் மேலைபழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை:
கரூா் நகராட்சியின் முதல் தலைவராக இருந்தவா் பெத்தாச்சி செட்டியாா். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் நகரில் 1889-ல் பெத்தாச்சி செட்டியாா் பிறந்த போதிலும், அவரது பெற்றோா் கரூா் வந்து தனது அயராது உழைப்பால் இப்போதைய கரூா் மாவட்டத்தின் ஆண்டிபட்டிக்கோட்டையின் ஜமீனாக உயா்ந்தவா்.
இவரது காலத்தில்தான் கரூா் நகராட்சியில் ஏழைகளுக்கான வரிவிதிப்பில் விலக்கு இருந்துள்ளது. மேலும் கரூா் கல்யாண பசுபதீசுவரா், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்களுக்கு பெத்தாட்சி செட்டியாா் மேற்கொண்ட திருப்பணிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க அவருக்கு மாநகராட்சியின் புது கட்டடத்துக்கு அவரது பெயா் சூட்டுவது சாலப்பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கரூா் திமுக வேட்பாளா்!

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெருமாள்புரத்தில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

