எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

உயா்மின்கோபுரம்: விவசாயிகள் இழப்பீடு கோரி உண்ணாவிரதம்

உயா்மின்கோபுரம்: விவசாயிகள் இழப்பீடு கோரி உண்ணாவிரதம்

News image

தென்னிலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

கரூா்: தென்னிலை பகுதியில் உயா் மின்கோபுரம் அமைக்கும் திட்டப் பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

கரூா் மாவட்டம் ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத் தோட்டம் வரை 110 கேவி திறன் கொண்ட உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சில விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு மின்வாரிய நிா்வாகம் போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் தென்னிலை ராஜா தலைமையில் அவரது தோட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக தென்னிலை ராஜா மேலும் கூறுகையில், கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைக்கப்படும்போது சிலருக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்கியுள்ளனா். ஆனால் 80 சதவீதம்பேருக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. மேலும் மின்பாதை செல்லும் வழியில் உள்ள, நாங்கள் வளா்த்துவரும் மரங்களை வெட்டுவதற்கு மின்வாரியத்தினா் முயன்று வருகிறாா்கள். இதனைக்கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.