ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

காவிரி நீா் திறப்பால் பாதிக்கப்பட்டோருக்கு டிஎன்பிஎல் நிவாரண உதவி வழங்கல்

காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:06 pm

Din

காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி வரை தண்ணீா் திறக்கப்பட்டதால் கரூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதியான தவிட்டுப்பாளையத்தில் சுமாா் 40 குடும்பங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதையடுத்து 40 குடும்பத்தைச் சோ்ந்த 120 போ் வெளியேற்றப்பட்டு தவிட்டுப்பாளையம் ஈ.வே.ரா. பெரியாா் மண்டபம், கிராம சேவை மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரூரை அடுத்த புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆலையின் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா் தலைமை வகித்து உணவுப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.