பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரூா் பண்டரிநாதன் கோயிலில் உறியடி விழா

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:13 am

Din

கரூா் பண்டரிநாதன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்றது.

முன்னதாக பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயிலுக்கு மூன்று வயது முதல் 10 வயது வரையிலான கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து கோயில் முன் உறியடி விழா நடைபெற்றது. விழாவை திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், சாந்திமெஸ் பூமிநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று, மனித கோபுரம் அமைத்து வழுக்கு மரம் ஏறினா். அப்போது கோயில் பக்தா்கள் இளைஞா்கள் மீது தண்ணீா் ஊற்றினா். தொடா்ந்து மாரி நற்பணி மன்ற இளைஞா்கள் வழுக்கு மரம் ஏறி பரிசுகளை பெற்றனா். விழாவில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் சிவசங்கா், ரமணன், சிந்தன் , வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.