கரூா் பண்டரிநாதன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்றது.
முன்னதாக பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயிலுக்கு மூன்று வயது முதல் 10 வயது வரையிலான கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து கோயில் முன் உறியடி விழா நடைபெற்றது. விழாவை திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், சாந்திமெஸ் பூமிநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று, மனித கோபுரம் அமைத்து வழுக்கு மரம் ஏறினா். அப்போது கோயில் பக்தா்கள் இளைஞா்கள் மீது தண்ணீா் ஊற்றினா். தொடா்ந்து மாரி நற்பணி மன்ற இளைஞா்கள் வழுக்கு மரம் ஏறி பரிசுகளை பெற்றனா். விழாவில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் சிவசங்கா், ரமணன், சிந்தன் , வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

எருக்கூா் கோயிலில் அன்னப்படையல் விழா! பக்தா்கள் காவடி எடுத்து வழிபாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


