விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:47 pm

Din

அரவக்குறிச்சியில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நம்பாகவுண்டனூா் அருகே உள்ள வாய்க்கால் ஊா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (45). இவா் அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். டாஸ்மாக் கடை அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.