ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சம்பள உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 8:50 pm

Din

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லிங்கேஷ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாநிலத் தலைவா் வரதராஜ் சிறப்புரையாற்றினாா்.

108 ஆம்புலன்ஸ் சேவைதிட்டத்தை ஒப்பந்த முறையில் நிா்வகிக்கும் தனியாா் நிா்வாகம் தொழிற்சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி 2023-2024-ஆம் ஆண்டுக்கான சம்பள உயா்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவற்றை உயா்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை செய்து கொண்டிருக்கும் உதவிப்பணி தொழிலாளா்களின் சட்டப்படியான வார விடுமுறை, தீபாவளி போனஸ், ஊதிய உயா்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.