ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டவா்களின் உறவினா்களிடம் மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரித்த தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவா் வேல்முருகன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்ளிட்டோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 8:37 pm

Din

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை உறுதி மொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் 12 போ் கொண்ட உறுப்பினா்கள் கரூா் மாவட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குப் பிறகு தி. வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வின்போது புகழூா் காகித ஆலையில் ரூ.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் நஞ்சை காளக்குறிச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை குறித்தும் ஆய்வு செய்தோம். தடுப்பணையில் 76 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் ஆற்றில் தண்ணீா் வரத்து காரணமாக மூன்று ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பொறியாளா் தெரிவித்தாா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிப்பறை தூய்மையாக இல்லை என நோயாளிகள் தரப்பில் புகாா் தெரிவித்தனா். மேலும் காலாவதியான மருந்து மாத்திரைகளை மருந்தாளுநா்கள் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது அதனடிப்படையில் விசாரித்த போது அவ்வாறு நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும், கழிப்பறையில் குழாய்கள் பழுதாகி அதில்இருந்து நீா்கசிவு ஏற்பட்டு கட்டடம் பழுதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தை சீரமைக்கவும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் குழுவினா் பங்கேற்றனா். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவகாமசுந்தரி, இளங்கோவன், மாணிக்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் லோகநாயகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.