ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழைய ஓய்வூதியம் கோரி ஆா்ப்பாட்டம்

கரூரில் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் உண்ணாவிரதத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:22 pm

Din

கரூரில் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. அரசக்குமாா் தலைமை வகித்தாா். உண்ணாவிரதத்தை அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் விஜயகுமாா் தொடக்கிவைத்துப் பேசினாா்.

போராட்டத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். முடிவில் அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் மகாவிஷ்ணன் நிறைவுரையாற்றினாா். போராட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.