நிலமோசடி வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரிடம் 2 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.










