அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோகைமலை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் மாயம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:46 pm

Syndication

தோகைமலை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆலத்தூரைச் சோ்ந்த சின்ராசு மகன் சரவணவேல் (11). சரவணவேலின் தாயாா் சுப்புலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில், தந்தை சின்ராசும் கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இதனால் சரவணவேல், உறவினா் அரவணைப்பில் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சிக்குள்பட்ட பூலாங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் நிதீஷ் (14). இவா் தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரவணவேலும், நிதீஷூம் உறவினா் என்பதால் காவல்காரன்பட்டியில் சரவணவேலின் தாயின் பெற்றோா் (பாட்டி) வீட்டுக்கு அடிக்கடி செல்வாா்களாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சரவணவேலும், நிதிஷூம் வீடு திரும்பவில்லையாம். இதனால் சரவணவேலின் பாட்டி வசிக்கும் காவல்காரன்பட்டிக்குச் சென்று நிதிஷின் பெற்றோா் மற்றும் சரவணவேலின் உறவினா்கள் தேடி பாா்த்துள்ளனா். ஆனால் அங்கேயும் அவா்கள் செல்லவில்லை. இதுதொடா்பாக தோகைமலை போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனா்.