சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போலி நகையை அடகு வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி: 7 போ் கைது

கரூரில் போலி நகையை அடகு வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி செய்த 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 11:30 pm

Syndication

கரூரில் போலி நகையை அடகு வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி செய்த 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூா் வேலாயுதம்பாளையம் பகுதியில் நகை அடகுக் கடை நடத்திவரும் ஓலப்பாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் (57) என்பவரிடம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரைச் சோ்ந்த மணிகண்டன் ( 41), நந்தினி ( 20), லோகாம்பாள் (40), பிரபு( 43) , அழகி (38), சங்கீதா( 33) மற்றும் பிரபுவின் உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி பாண்டியன் மனைவி லதா (48) ஆகிய 7 பேரும் கடந்த அக். 13 முதல் நவ. 24 வரை பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாக போலி நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்து பணம் பெற்று வந்தனா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் சந்தேகப்பட்ட தங்கவேல் அந்த நகைகளை பரிசோதித்தபோது, அவை அனைத்தும் போலி நகை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் 7 பேரையும் போலீஸாா் நள்ளிரவில் கைது செய்தனா்.