டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

கரூா்: மாவட்டத்தில் உள்ள கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் நகுல்சாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க கூட்டமைப்பின் தலைவா் என். மாரப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

சென்னையில் 19-இல் ஆா்ப்பாட்டம்: பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இ-பைலிங் விவகாரத்தை கண்டித்து வரும் 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் அருகே மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தற்போது நடைபெறும் போராட்டத்தில், தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றக் கூடிய சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.