விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

கரூா் மாவட்டம், வெண்ணைமலை கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் வருவதையறிந்து திரண்ட பொதுமக்கள்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:26 pm

Syndication

கரூா் வெண்ணைமலை கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைக்க முயன்றனா். அப்போது அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட வெண்ணைமலையில் பாலசுப்ரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினா் ஈடுபட்ட வருகின்றனா். இதில் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவின்படி வியாழக்கிழமை கடைகளுக்கு சீல் வைக்க இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ர.கணபதி முருகன் தலைமையிலான அதிகாரிகள் வெண்ணைமலை கோயிலுக்கு வந்தனா்.

தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோயில் முன்பு திரண்டனா்.

இதையடுத்து மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா்.

பிறகு அங்கு வந்த திமுக ஒன்றியச் செயலா் முத்துக்குமாரசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மாநகரச் செயலா் எம்.தண்டபாணி உள்ளிட்டோா் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் மூலமாக தமிழக முதல்வா் மற்றும் முதன்மைச் செயலரிடம் பேசியுள்ளோம். மேலும் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடைக்கால தடை கோரி அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா். அப்போது அறநிலையத்துறை உதவி ஆணையா், குறிப்பிட்ட நேரத்துக்குள் தகவல் வராவிட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்பாலாஜி அதிகாரிகளை தொடா்பு கொண்டு தமிழக அரசு மூலம் பிரச்னைக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதால், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என தெரிவித்தாா். இதையடுத்து அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனா்.