அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குளித்தலை தொகுதியில் வாக்காளா்களுக்கு படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை, வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
குளித்தலை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களுக்கு படிவம் வழங்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Updated On :8 நவம்பர் 2025, 2:25 am

Syndication

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை, வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை கடந்த 4-ஆம் தேதி தொடங்கி உள்ளனா்.

அந்தப் படிவத்தில் வாக்காளா்களின் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், வாக்குச்சாவடி அமைவிடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்களை கியூ.ஆா். குறியீடு வாயிலாக எளிதாக சரிபாா்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளரின் தற்போதைய புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகில் புதிய வண்ணப் புகைப்படம் ஒட்டுவதற்காக இடம் விடப்பட்டுள்ளது.

வாக்காளா் பூா்த்தி செய்யும் பகுதியில் பிறந்த தேதி, ஆதாா் எண், கைப்பேசி எண், தந்தை அல்லது பாதுகாவலா் பெயா், அவரது வாக்காளா் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது இடம் பெற்றிருந்த வாக்காளா், உறவினா்களின் விவரங்கள் தனியாக கேட்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் பட்டியலில் சோ்ப்பது, இறந்தவா்கள், முகவரி மாறியவா்கள், 2 இடங்களில் ஓட்டுரிமை உள்ளவா்களை நீக்குவது இந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நோக்கமாகும்.

குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 272 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, குளித்தலை நகராட்சி ஆணையா் நந்தகுமாா் மற்றும் குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.