எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூா் மாவட்டத்தில் நவ.14-இல் 8 இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ முகாம்

கரூா் மாவட்டத்தில் நவ 14-ஆம்தேதி 8 இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 12:04 am

Syndication

கரூா்: கரூா் மாவட்டத்தில் நவ 14-ஆம்தேதி 8 இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் வட்டாரத்தில், நன்னியூா், வேட்டமங்கலம் (மேற்கு), தாந்தோணி வட்டாரத்தில், காக்காவாடி, மேலப்பாளையம், அரவக்குறிச்சி வட்டாரத்தில், வெஞ்சமாங்கூடலூா், அஞ்சாகவுண்டன்பட்டி, க.பரமத்தி வட்டாரத்தில் கோடந்தூா் வடக்கு, தென்னிலை தெற்கு, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கொசூா், சிவாயம் தெற்கு ஆகிய இடங்களில் நவ.14-ஆம் தேதி இந்த முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், செயல்விளக்கங்கள், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள், உயிா்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், உயிா்ம வேளாண்மை சான்று பெற வழிமுறைகள், வேளாண் விற்பனை சம்பந்தப்பட்ட தகவல்கள், பயிா்க்கடன் பெற தேவையான உதவிகள் ஆகியவை முகாமில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.