இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

ஞாயிா்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி. மீட்டரில்)- கரூா்-22, அரவக்குறிச்சி-22, அணைப்பாளையம்-19, க.பரமத்தி-32, குளித்தலை-9, தோகைமலை-53.80, கிருஷ்ணராயபுரம்-16, மாயனூா்-20, பஞ்சப்பட்டி-12.40, கடவூா்-12, பாலவிடுதி-10, மைலம்பட்டி-12 என மொத்தம் 240.90 மி.மீ. மழை பெய்துள்ளது.