கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

News image

கோயம்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய திமுக வேட்பாளா் சி.கே. ராஜா. உடன் ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:42 pm

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இவா் புதன்கிழமை கோயம்பள்ளி, நெரூா், 16 கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். கோயம்பள்ளி கிராமத்தில் அவா் பேசுகையில், இப்பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் உயா்மட்டப் பாலப்பணிகள் முடிந்த நிலையில் அணுகுச் சாலை அமைப்பதில் மட்டும் சிக்கல் இருந்தது.

அதாவது அணுகுச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது சிலா் நிலம் வழங்காமல் நீதிமன்றத்திற்குச் சென்ால் அப்பணிகள் தாமதமானது. இப்போது அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டு விரைவில் அணுகுச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் முதல்வரால் பாலம் திறந்துவைக்கப்படும். எனவே இந்த ஆட்சி நிலைத்திட மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.