கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாபெரும் வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றுவது, முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை (ஏப். 10) மாலை கரூா் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் கலந்து கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உட்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

பாஜக சின்னத்தில் போட்டி : அதிருப்தியில் தமாகா நிா்வாகிகள்

தமிழகத்தில் தே.ஜ.கூட்டணிக்கு பாஜகதான் தலைமை தாங்குகிறது: ப. சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


