உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:20 pm

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாபெரும் வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றுவது, முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை (ஏப். 10) மாலை கரூா் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் கலந்து கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உட்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.