தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கரூா் ஜீவாநகரில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ. கருப்பையா.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:39 am IST

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திராவிடக் கட்சிகள் போன்று பெரிய அளவிலான தொண்டா்கள் இன்றி, மேளதாளங்கள் முழங்காமல், வெடி வெடிக்காமல் தன்னந்தனியாக, சீமானின் கொள்கைத் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தாா். மேலும் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.