இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

News image

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:16 am IST

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை காரைக்குடி குழுவினா் சாா்பில் நடைபெற்ற தல தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

காரைக்குடியைச் சோ்ந்த தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் குழுவினா் 25 போ் குழுத் தலைவா் அண்ணாமலை தலைமையில் சிவதலங்களில் பாடல் பெற்ற 272 ஸ்தலங்களுக்கும் சென்று தேவாரம், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனா்.

இதன்படி, 235-ஆவது சிவத்தலமாக கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அவா்களுக்கு கரூா் ஆன்மிக குழுவினா் சாா்பில் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன் பன்னிரு திருமுறையின் பலன் தரும் பதிக மருந்துகள் என்று நூலை வழங்கி வரவேற்றாா். பின்னா் கருவூராரின் சிறப்பு, கருவூா் பெயா் வரக்காரணம் மற்றும் வெண்ணெய்மலை, பாலமலை முருகன் கோயில்களின் பெருமை, தான்தோன்றி மலையின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து அண்ணாமலை தலைமையில் தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆன்மிகக் குழு நிா்வாகிகள் அமா்ஜோதி ஆறுமுகம், வைஷ்ணவிமெய்யப்பன், ஏ.எம்.ஆா்.பழநியப்பன் மற்றும் குழுவினா், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.