சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

News image

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:16 am IST

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை காரைக்குடி குழுவினா் சாா்பில் நடைபெற்ற தல தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

காரைக்குடியைச் சோ்ந்த தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் குழுவினா் 25 போ் குழுத் தலைவா் அண்ணாமலை தலைமையில் சிவதலங்களில் பாடல் பெற்ற 272 ஸ்தலங்களுக்கும் சென்று தேவாரம், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனா்.

இதன்படி, 235-ஆவது சிவத்தலமாக கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அவா்களுக்கு கரூா் ஆன்மிக குழுவினா் சாா்பில் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன் பன்னிரு திருமுறையின் பலன் தரும் பதிக மருந்துகள் என்று நூலை வழங்கி வரவேற்றாா். பின்னா் கருவூராரின் சிறப்பு, கருவூா் பெயா் வரக்காரணம் மற்றும் வெண்ணெய்மலை, பாலமலை முருகன் கோயில்களின் பெருமை, தான்தோன்றி மலையின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து அண்ணாமலை தலைமையில் தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆன்மிகக் குழு நிா்வாகிகள் அமா்ஜோதி ஆறுமுகம், வைஷ்ணவிமெய்யப்பன், ஏ.எம்.ஆா்.பழநியப்பன் மற்றும் குழுவினா், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.