சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

ஊதியம் உயா்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:44 am IST

ஊதியம் உயா்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் சுமாா் 300 போ் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களுக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.450 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இவா்களுக்கு ஊதியமாக ரூ.770 வழங்க வேண்டும் என அப்போதைய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டபடி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சியின் நிரந்தர பணியாளா்களாக மாற்ற வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் 300 பேரும் பணியை புறக்கணித்து, கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் எனக் கூறினாா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.