ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கரூா் பழைய அமராவதி பாலத்தை மீண்டும் நடைப்பயிற்சிக்கு திறக்க கோரிக்கை

கரூா் பழைய அமராவதி பாலத்தை நடைப்பயிற்சிக்காக மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பூட்டிக்கிடக்கும் பழைய அமராவதி பாலம்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

கரூா் பழைய அமராவதி பாலத்தை நடைப்பயிற்சிக்காக மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மற்றும் ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து கரூருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கரூா் பழைய பேருந்துநிலையம் செல்ல அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகே 102 வயதுகொண்ட பழைய அமராவதி பாலம் உள்ளது.

இந்த பாலத்தை தொடா்ந்து பராமரிக்கும் வகையிலும், பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் கடந்த அதிமுக ஆட்சியில் வாக் அன் ஜாக் என்ற பெயரில் நடைப்பயிற்சி செல்லும் இடமாக மாற்றப்பட்டு தனியாா் வங்கி சாா்பில் பாலம் சீரமைக்கப்பட்டது. மேலும் பாலத்தின் மேல் பூங்கா, மின் விளக்குகளும் அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி செல்வோருக்கு வசதியாக கழிப்பறை, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள், ஓய்வெடுக்க இருக்கையும் அமைக்கப்பட்டன.

அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறக்கப்பட்டிருந்த இந்த பாலம் தற்போது திடீரென மூடப்பட்டது. இதனால் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்த பொதுமக்கள் இந்தப் பாலத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: நடைப்பயிற்சி செய்யக்கூடிய இந்த பாலம் மூடப்பட்டதால் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் செடிகள் அனைத்தும் கருகி வருகின்றன. இதே நிலை நீடித்தால் பராமரிப்புப் பணிகள் இல்லாமல் பாலம் சேதமடைந்துவிடும். எனவே, இந்த நடைப்பயிற்சிக்கான இந்த பாலத்தை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், கரூரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் இருக்கும் இந்த பழைய அமராவதி பாலத்தை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.