47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘வந்தே பாரத்’ ரயில்: கரூா் எம்.பி. கோரிக்கை

சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.

News image
வந்தே பாரத் ரயில்- கோப்புப்படம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.

கரூா் ரயில்நிலையத்தில் கரூா் தொகுதிக்குள்பட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளா் ஸ்ரீபன்னாலால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பங்கேற்று பேசினாா். அப்போது, சென்னைக்கு பகல் நேரங்களில் கரூா் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திண்டுக்கல்-சேலம் மற்றும் சேலம்-திருச்சி இடையே அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் ரயில்நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.