பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேய்ச்சல் நிலத்தில் ரசாயனக் கழிவு! 20 ஆடுகள் உயிரிழந்ததாக புகாா்!

தரகம்பட்டி அருகே மேய்ச்சல் நிலத்தில் ரசாயன கழிவை மா்ம நபா்கள் ஊற்றியதால் 20 ஆடுகள் உயிரிழந்தாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
தரகம்பட்டி அருகே மேய்ச்சல் நிலத்தில் ரசாயன கழிவை கொட்டியதால் கருகிப்போன மரங்கள்.
Updated On :3 ஜனவரி 2026, 7:26 pm

Syndication

தரகம்பட்டி அருகே மேய்ச்சல் நிலத்தில் ரசாயன கழிவை மா்ம நபா்கள் ஊற்றியதால் 20 ஆடுகள் உயிரிழந்தாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சிக்குள்பட்ட கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி இடையே தனியாருக்குச் சொந்தமான சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் தரிசு நிலம் உள்ளது. இந்த தரிசு நிலத்தில் கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி கிராமங்களை சோ்ந்த கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தங்களது கால்கடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த இடத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்மநபா்கள் திரவ நிலையிலான ரசயான கழிவுகளை டேங்கா் லாரியில் கொண்டு வந்து ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருந்த மரங்கள், செடிகொடிகள், புற்கள் அனைத்தும் கருகிவிட்டன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ரசயான கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் எஞ்சி இருந்த புற்களை சனிக்கிழமை மேய்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தாகவும், கழிவு நீரை ஊற்றிய மா்ம நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.