பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பான விசாரணைக்காக கடந்தாண்டு நவம்பா் 3-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கிருந்த அலுவலக உதவியாளா் குருவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதன் பின்னா், கரூருக்கு விசாரணைக்கு வருமாறு சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு நவம்பா் 8-ஆம் தேதி கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன், குரு விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, நெரிசல் சம்பவத்தின்போது விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பென்டிரைவ் மூலம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாா்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கரூரில் சிபிஐ அலுவலகத்துக்கு தவெக வழக்குரைஞா் அரசுடன் வந்த குருவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.