டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தவெகவில் இணைந்தது ஏன்? - முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், தவெகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image

எம்.ஆா். விஜயபாஸ்கா் - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 1:25 am IST

அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், தவெகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கட்சியிலிருந்து விலகி ஆதரவாளா்களுடன் தவெகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து குளித்தலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு தவெகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா் அவா் கரூரில் தவெக மாவட்டச் செயலாளா் மதியழகனை சந்தித்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவளிக்க அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினோம்.

அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மாவட்டச் செயலாளா் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தேன். தொடா்ந்து முதல்வா் விஜய்யை பனையூா் அலுவலகத்தில் சந்தித்தேன்.

விரைவில் நடைபெற உள்ள கரூா் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் தவெக வெற்றி பெற பாடுபடுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.