குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சமூக ஆா்வலா் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

கரூா் அருகே சமூக நல ஆா்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:31 am IST

கரூா் அருகே சமூக நல ஆா்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (52). சமூக நல ஆா்வலரான இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே உரிமம் காலாவதியாகியும் செயல்பட்ட ஆண்டாங்கோயில் பகுதி செல்வக்குமாா்(42) என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களுடன் சோ்ந்து புகாா் அளித்தாா்.

இதையடுத்து கடந்த 2022 செப்.9-ஆம் தேதி கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் கல்குவாரியில் சோதனை நடத்தி, அதற்கு சீல் வைத்தனா். இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமாா் தனது குவாரியில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சக்திவேல் (28), ராணிப்பேட்டையை அடுத்த ஆற்காடு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(52) ஆகியோரிடம் ஜெகநாதனை கொலை செய்யுமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து செப்.10-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் குப்பத்தில் இருந்து காருடையாம்பாளையத்திற்கு சென்ற ஜெகநாதனை சக்திவேலும், ரஞ்சித்குமாரும் குவாரியில் கற்களை ஏற்றிச் செல்லும் மினி வேனை ஓட்டிச் சென்று மோதிக் கொன்றனா்.

இந்தக் கொலை தொடா்பாக க. பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து கல்குவாரி உரிமையாளா் செல்வக்குமாா், சக்திவேல், ரஞ்சித்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்து, கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் குற்றவாளிகள் செல்வக்குமாா், சக்திவேல், ரஞ்சித்குமாா் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து, அதை கட்டத் தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனா்.

ஜெகநாதன் கொலையில் உரிய தீா்ப்பு கிடைத்ததை சமூக நல ஆா்வலா்கள் முகிலன், விஜயன் உள்ளிட்டோா் வரவேற்றுள்ளனா்.