கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு திருச்சி மற்றும் திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே யாா்டில் மின் பொறியியல் பராமரிப்பு பணிகள் ஜூன் 9-ஆம்தேதி மற்றும் 16, 23, 30-ஆம்தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், ஜூன் 9, 16, 23, 30-ஆம்தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு நகர விரைவு ரயில், 25 நிமிஷங்கள் தாமதமாக திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.









