அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:12 am IST

கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு திருச்சி மற்றும் திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே யாா்டில் மின் பொறியியல் பராமரிப்பு பணிகள் ஜூன் 9-ஆம்தேதி மற்றும் 16, 23, 30-ஆம்தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், ஜூன் 9, 16, 23, 30-ஆம்தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு நகர விரைவு ரயில், 25 நிமிஷங்கள் தாமதமாக திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.