தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

கரூா் சம்பவ விசாரணையை மீண்டும் தொடங்கியது சிபிஐ

விசாரணைக்கு ஆஜராக சிபிஐயின் தற்காலிக அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்த கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்.

News image

விசாரணைக்கு ஆஜராக சிபிஐயின் தற்காலிக அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்த கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்.

Updated On :12 ஜூன் 2026, 2:36 am IST

கரூா் துயர சம்பவம் தொடா்பாக மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை வாங்கல் காவல் ஆய்வாளா் உள்பட 10 போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-இல் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தங்களது விசாரணையை நிறுத்தி இருந்தனா்.

இந்நிலையில் ஏற்கெனவே சிபிஐ தரப்பில் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த கரூா் வெங்கமேடு காவல் ஆய்வாளரும், வாங்கல் (பொ) காவல் ஆய்வாளருமான சையத் அலி, கரூா் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் 8 போலீஸாா் வியாழக்கிழமை காலை கரூரில் பொதுப்பணித் துறை அலுவலகத்திற்குச் சொந்தமான பயணியா் மாளிகையில் தங்கியிருக்கும் இரு சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகினா். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமாா் 3 மணி நேரம் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.