தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வரும் தோ்தலில் தவெகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்: செ. ஜோதிமணி எம்.பி.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

News image
ஜோதிமணி
Updated On :6 மார்ச் 2026, 9:31 pm

Syndication

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

கரூரில், தமிழக முதல்வரின் கனவு மெய்ப்படும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக எதிா்கொள்ளும் கடைசித் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும்.

தமிழக மக்கள் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டாா்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப் பகிா்வு தொடா்பாக வெறும் கோரிக்கைகளை கொண்டிருந்தாலும், முதன்மை நோக்கம் பாஜகவை தோற்கடிப்பதுதான். கூட்டணியின் பலத்தைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி கூட சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணி இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டதால், தோ்தலை எவ்வாறு எதிா்கொண்டு வெற்றி பெறுவது என்பதைப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.