/

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சம் பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
குளித்தலை அருகே புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.1லட்சத்தை குளித்தலை சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுவாதிஸ்ரீயிடம் வழங்கிய நிலையான கண்காணிப்பு குழுவினா்.
Updated On :18 மார்ச் 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் புதன்கிழமை மாலை குளித்தலையை அடுத்த இரும்பூதிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே காரில் வந்த திருச்சி காந்திமாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த பிளாஸ்டிக் கடை உரிமையாளா் கைலாஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சம் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரூ.1லட்சத்தை பறிமுதல் செய்த கண்காணிப்புக்குழுவினா், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா்- ஆட்சியருமான சுவாதிஸ்ரீயிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் குளித்தலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.