வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுபானக் கடையை  அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:44 pm

DIN

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர். 
 இதுதொடர்பாக பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையம் கிராம மக்கள் அளித்த மனு: பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீ. தொலைவில் அரசு மதுபானக் கடைகள் செயல்படக்கூடாது என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
 அதன்பேரில், பல இடங்களில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், குரும்பலூர் பாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையோரத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.