அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இருபிரிவினரிடையே மோதல்: 10 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினரிடையே புதன்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பாக கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:57 am

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினரிடையே புதன்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பாக கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிண்டல் செய்தாராம். இதையறிந்த மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் வீடு, சுமை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஒரு தரப்பினர் சேதப்படுத்தினர். மேலும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் சிவக்குமார் (34), அழகுவேல் (32), மணிவேல் (21) உள்பட 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த மங்களமேடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பேச்சு வார்த்தை மேற்கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கை. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இரு பிரிவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (35), மணிவேல் (30), மணிகண்டன் (35), வீரராகவன் (26), ரமேஷ்குமார் (24), பிரவீன்குமார் (20) உள்பட 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.