தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: எழுத்துத் தேர்வுக்கு 734 பேர் தகுதி

பெரம்பலூரில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 12,534 இளைஞர்களில், 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:53 am IST

பெரம்பலூரில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 12,534 இளைஞர்களில், 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். 
பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், பெரம்பலூரில் நடைபெற்றது. 
கடந்த 10 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 17) வரை நடைபெற்ற முகாமில் 12,534 பேர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு, 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு திருச்சியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆள் சேர்ப்பு முகாம், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.