வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெரம்பலூரில் பதிவு எண் இல்லாமல் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்

பெரம்பலூர் நகரில் பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள், பெயர், படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க

News image
Updated On :9 ஜூலை 2018, 2:51 am

DIN

பெரம்பலூர் நகரில் பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள், பெயர், படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸார் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  
பெரம்பலூர் நகரின் பல பகுதிகள் வாகன நெரிசலால் சிக்கித் திணறுவது வாடிக்கையாக உள்ளது. போதிய போக்குவரத்துக் காவலர்கள் இல்லாததால், சாலை விதிமீறல்கள் சர்வ சாதாரணமாகி விட்டது. 
இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் பலர், தங்களது வாகனத்தில் பதிவு எண்ணை எழுதாமலும், அந்த இடத்தில் தங்களது குடும்பப் பெயர், விரும்பிய நடிகர், கடவுள், பணியாற்றும் நிறுவனம், கவிதை என எழுதி வைத்திருக்கின்றனர். சில வாகனங்களில், எண்களுக்குப் பதிலாக போலீஸ், பிரஸ், ஆர்மி, எக்ஸ்- ஆர்மி உள்ளிட்ட வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. 
காவல் துறையில் பணியாற்றாத, அந்தத் துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களும் தங்களது வாகனத்தில் போலீஸ் என்று எழுதிக் கொள்கின்றனர். துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸ், டிஜிட்டல் பேனர் தயாரிப்போர் கூட பத்திரிகையாளர்களைப் போல பிரஸ் எனும் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
இதில், அண்மைக்காலமாக கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச் சம்வங்களில் ஈடுபடுவோர் அதிகளவில் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை பயன்படுத்தப்படுவதாகவும், பதிவு எண் எழுதப்படாத வாகனங்கள், விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும்போது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
குற்ற வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களை ஏலம் எடுப்போர், புதிய பதிவு எண்களை வாங்காமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது, அவற்றை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனவே, நகரில் வாகனங்கள் பதிவு எண் இல்லாதது, பெயர், படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.