/

அரும்பாவூரில் சித்த மருத்துவப் பிரிவு தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டம்,  அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On :23 ஜனவரி 2019, 7:25 am IST

பெரம்பலூர் மாவட்டம்,  அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் இப்பிரிவை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடக்கி வைத்து பேசியது:
கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில்,  ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான  அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள்உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.   அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை, வாலிகண்டபுரம், வி.களத்தூர், பூலாம்பாடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது.  
அரும்பாவூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சித்த மருத்துவ உதவிகள்  கிடைக்கும் வகையில் தற்போது இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதன், சனிக்கிழமைகளில் மருத்துவர்கள் சிகிச்சையளிப்பர் என்றார் மாவட்ட ஆட்சியர் சாந்தா.  சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத்,  ஒருங்கிணைந்த மாவட்ட  சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ், அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயன் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில்  பங்கேற்றனர்.                                                    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.