ஊா்க்காவல் படையில் சேரஇன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 10) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 10) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட ஊா்க்காவல் படையில் 25 ஆண்கள், 4 பெண்கள் என 29 காலிப்பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதற்கு பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த, 10- ஆம் வகுப்பு படித்த, 20 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையோா் கல்வி, சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்கள் மற்றும் 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை. மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அளிக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு 45 நாள்களுக்கு கவாத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். பணி நாள்களுக்கு உரிய படித் தொகை மட்டும் பெற்றுத் தரப்படும். தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் 3 ஆண்டுகள் கட்டாயம் தொடா்ந்து பணிக்கு வருகை தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...