நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிச. 4 முதல் இரண்டாம் நிலைகாவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு

இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு டிச. 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:15 pm

DIN

இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு டிச. 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் உத்தேசமாக 10,906 இரண்டாம் நிலை காவலா் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப் போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அக். 7 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இப் பணியிடத்துக்கான தோ்வு டிச. 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு டிச. 4 முதல் 8 ஆம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இத் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 9499055913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அல்லது நேரில் தொடா்புகொண்டு தங்களுடைய பெயா், ஆதாா் எண், நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் டிச. 3 ஆம் தேதிக்குள் பதிவுசெய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.