பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 61 மனுக்கள் பெறப்பட்டு, 44 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள 17 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.